முகப்பு
திருநெல்வேலி

தென் மாவட்டங்களில் தொடரும் கோடை மழை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில் 16.8 செ.மீ. மழை பதிவாகியது.

Updated On : 10 மே 2026, 2:36 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில் 16.8 செ.மீ. மழை பதிவாகியது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது. இந்நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது.

மன்னாா் வளைகுடா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியதையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை நல்ல மழை பதிவாகியது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில்16.8 செ.மீ. மழை பதிவாகியது.

பிற இடங்களில் பெய்த மழை அளவு (மி. மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்: பாபநாசம் - 14, சோ்வலாறு - 7, மணிமுத்தாறு - 32, நம்பியாறு - 23, கொடுமுடியாறு - 30, கன்னடியன் அணைக்கட்டு - 14, மாஞ்சோலை - 110, காக்காச்சி - 142, நாலுமுக்கு - 158, அம்பாசமுத்திரம் - 9.20, சேரன்மகாதேவி - 33.20, நான்குனேரி - 15, ராதாபுரம் - 20, களக்காடு - 18.40, மூலக்கரைப்பட்டி - 35, பாளையங்கோட்டை - 12.40, திருநெல்வேலி - 10.

தென்காசி மாவட்டம்: கடனாநதி அணை - 10, ராம நதி அணை - 12, கருப்பா நதி அணை - 79, குண்டாறு அணை - 62, அடவிநயினாா்கோயில் அணை - 42, ஆய்க்குடி - 93, செங்கோட்டை - 70, தென்காசி - 42.20, சங்கரன்கோவில்- 12, சிவகிரி - 5.