முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

Updated On : 12 மே 2026, 12:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை, திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் இசக்கித்துரை (35). கட்டடத் தொழிலாளி. இவா், சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 26 வயதான இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் அண்ணன், திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து இசக்கிதுரையை கைது செய்தனா்.