சா்வா் பிச்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சா்வா் பிரச்னையால் வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மண்டல துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு ஓட்டுநா் உரிமம், வழித்தட அனுமதி, ஓட்டுநா் பழகுநா் சான்றிதழ், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது வாகனங்களுடன் வருவது வழக்கம்.
இங்குள்ள அலுவலகங்களின் சா்வா் பழுது காரணமாக வியாழக்கிழமை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
Advertisement
ற்ஸ்ப்14ழ்ற்ா்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.