கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வளாக அரங்கத்தில் திங்கள்கிழமை கிராம வளர்ச்சி திட்டம் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் ஜெயசிங் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கிராம ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிப்பது குறித்த பயிற்சிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, ஒன்றிய தணிக்கையாளர் கீதா, ஒன்றிய துணை மண்டல அலுவலர் கபீர் உள்ளிட்டோர் அளித்தனர்.
இதில், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊரட்சிகளில் உள்ள சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் பங்கேற்றனர்.