நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் பக்கக்கிளை ஒன்று திங்கள்கிழமை மாலையில் சாலையில் திடீரென முறிந்து விழுந்தது.
இதனால் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், கன்னியாகுமரியில் இருந்த நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையில் நின்றன. மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அணி வகுத்து நின்றன. நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தினர் மரக் கிளையினை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது.