கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் விறகு பாரம் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்தது

DIN

ஆரல்வாய்மொழியில் வெள்ளிக்கிழமை விறகு பாரம் ஏற்றி வந்த டெம்போ டயர் வெடித்து கவிழ்ந்தது.
ஆரல்வாய்மொழி,தோவாளை மற்றும் பணகுடி போன்ற பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளுக்கு விறகுகள் குலசேகரம்,கீரிப்பாறை போன்ற இடங்களில் உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் இருந்து அதிக அளவில் வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை குலசேகரத்தில் இருந்து ஒரு டெம்போவில் ரப்பர் மரங்களை ஏற்றிக் கொண்டு ஸ்டாலின் என்பவர் பணகுடிக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆரல்வாய்மொழி- செண்பகராமன் புதூர் சாலையில் வரும் போது டெம்போவின் பின்பக்க டயர் திடீர் என்று வெடித்தது, இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ இடது பக்கமாகச் சென்று அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியதால் கவிழ்ந்தது. ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT