தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி சாவு
சுசீந்திரம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி உயிரிழந்தார்.
சுசீந்திரம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வியாபாரி உயிரிழந்தார்.
சுசீந்திரத்தை அடுத்த மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(53). வாழைத்தார் வியாபாரி. இவர் வீட்டு பின்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவர் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.