இந்திய மாணவர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு பேரவைக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பதில்சிங் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிஸ்கில் வரவேற்றார். அக். 24 ஆம் தேதி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் வழங்கி டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கிராமப் பகுதிகளில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 3 நாள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் என்.எஸ்.கண்ணன், இந்திய மாணவர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.விஜய் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் புதிய மாவட்டத் தலைவராக ஜெசின், மாவட்டச் செயலராக பிரிஸ்கில் உள்பட 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னாள் மாநிலத் தலைவர் என்.ரெஜீஷ்குமார் நிறைவுரையாற்றினார்.