உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோயிலில் வைகாசி கொடை விழா நிறைவு பெற்றது.
இக்கோயில் கொடை விழா மே 21ஆம் தேதி 1008 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் வீதியுலா, பால்குட ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், அம்மன் சப்பர பவனி, மஞ்சள் நீராடுதல், பைரவர் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. மே 24ஆம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.