கன்னியாகுமரி

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 6.70 லட்சம் நிதி

DIN

கன்னியாகுமரி  மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 6.70 லட்சம் நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் சனிக்கிழமை வழங்கினார்.
குமரி மாவட்டம், தக்கலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர், கடந்த 5ஆம் தேதி பணி நிமித்தமாக சுசீந்திரத்தில் இருந்து வரும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி  அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு, குமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சார்பில், ரூ. 6 லட்சத்து 70 ஆயிரத்து 600 நிதி திரட்டப்பட்டது.
இந்த நிதியை விபத்தில் பலியான தலைமைக் காவலர் முருகனின் மனைவியிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT