கன்னியாகுமரி

நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

DIN

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் திங்கள்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு  அமைப்பின் தலைவர் திருத்தமிழ் தேவனார் தலைமை வகித்தார்.  சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.  ஆண், பெண் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில் பச்சைத் தமிழகம் தலைவர் சுப. உதயகுமாரன், குமரி பெண்கள் போராட்டக்குழு நிர்வாகி சவுமினி,  பெண்கள் இணைப்பு குழுவைச் சேர்ந்த சுதா,  செல்லத்தங்கம்,  சமூக ஆர்வலர் ஜெரால்டு, மற்றும் முத்துகுமார், நிலவுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த போஸ், விவசாயிகள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் ரவி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT