மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்சிறை வட்டார கமிட்டி கூட்டம் காஞ்சாம்புறம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் விக்டர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி, வட்டார செயலர் சிதம்பர கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஜாண் ரூபி, சுரேஷ்குமார், மேரிதாசன், வல்சலம், ராஜு, லலிதா, ஜெயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அண்மையில் பெய்த மழையில் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மங்காடு, பணமுகம், பள்ளிக்கல், வைக்கல்லூர், கோயிக்கத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளால் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
இதைக் கண்டித்து நவ. 2 ஆம் தேதி முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.