கன்னியாகுமரி

ஊழலுக்கு எதிராக திமுக போராடுவது வேடிக்கை

DIN

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊழலின் பிறப்பிடமாக விளங்குவது திமுக. ஒருமுறை ஊழலுக்காகவும், மற்றொரு முறை தீவிரவாத ஆதரவுக்காகவும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டது திமுக என்பதை மறந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் ஒருநபர் ஒப்பந்தமாக திமுக ஆட்சியில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோலத்தான், இப்போதும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT