கன்னியாகுமரி

குமரியில் இன்று இலவச கண் சிகிச்சை  முகாம் தொடக்கம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்புரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை (செப்.19)  தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.19இல் தோவாளை ஒன்றியம் , எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலயத்திலும், செப்.20இல் தக்கலை ஒன்றியம், செம்பருத்திவிளை, செப்.24இல் குருந்தன்கோடு, செப்.25இல் முன்சிறை ஒன்றியம், கொல்லங்கோடு, செப்.27இல் மேல்புறம்  ஒன்றியம்,  இடைக்கோடு, செப்.28இல் அகஸ்தீசுவரம் ஒன்றியம், கொட்டாரம்  ஆகிய பகுதிகளின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முகாம்கள் நடைபெறும். 
கண்புரை நோயாளிளுக்கு இலவசமாக கண் லென்ஸ் பொருத்தப்படும்.  பின்னர், அவர்கள் மறுநாள் அரசு வாகனத்தில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர். கண் நோயாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT