சில்லறை வணிகத்தை பாதுகாக்கவும், ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்கவும், பன்னாட்டு நிறுவனங்களைப் புறக்கணிக்கவும் வலியுறுத்தி, குமரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பிரசாரப் பயணம் செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கியது .
இந்நிகழ்வுக்கு, குமரி மாவட்டத் தலைவர் எல்.எம்.டேவிட்சன் தலைமை வகித்தார். செயலர் சி.நாராயணராஜா, பொருளாளர் ஜே.பி,ஜேம்ஸ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தம்பித்தங்கம் பயணத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ் மற்றும் வியாபாரிகள் பி.பகவதியப்பன், பாலு, நாராயணன், ஜாண்சன், பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மலைக்கோட்டையில் பயணம் நிறைவடையும். அங்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் சுதேசி பிரகடனம் மேற் கொள்ளப்படும்.