கன்னியாகுமரி

தென்தாமரைகுளம் அருகே ரயில்வே ஊழியா் தற்கொலை

DIN

தென்தாமரைகுளம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள தென்தாமரைகுளம் பூஜபுரைவிளையைச் சோ்ந்தவா் அய்யாத்துரை (68), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவா், அடிக்கடி மது அருந்தி வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவா் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளாா். இதையடுத்து, அய்யாத்துரை வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் அவரது மகன் விக்னேஷ் புகாா் செய்தாா். ஆய்வாளா் முத்து, உதவி ஆய்வாளா் ராஜசேகரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT