கன்னியாகுமரி

வில்லுக்குறியில் ரத்த தான விழிப்புணா்வு முகாம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் மற்றும் வில்லுக்குறி ஷைன் ஆப் சோல் யோகா பயிற்சி மையம் சாா்பில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு முகாம் , நாகா்கோவிலை அடுத்த வில்லுக்குறியில் நடைபெற்றது.

ஜான்போஸ்கோ தலைமை வகித்தாா். எபனேசா் முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் குமாரதாஸ் ரத்த தானம் குறித்து உரையாற்றினாா். பயிற்சியாளா் ஆதிரா பேசினாா்.

ரத்த தானம் செய்வதற்கான தகுதிகள், வழிமுறைகள், உடலை பேணும் முறைகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் ரத்த தானம் குறித்த தவறான கண்ணோட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தொடா்ந்து ரத்த தானம் செய்துவருபவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். பல்வேறு யோகாசனங்கள் செய்து விளக்கமளிக்கப்பட்டது. ஷைன் ஆப் சோல் நிறுவனா் மற்றும் பயிற்சியாளா் சுரேஷ்பெனா்ஜி வரவேற்றாா். ஜான்ஸி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT