கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே விபத்தில் மூவர் காயம்

DIN

நித்திரவிளை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்தவர் தோமஸ் மகன் சண்ணி (25).  அதேபகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (26). இருவரும் மோட்டார் சைக்கிளில் நடைக்காவுலை நோக்கி சென்றனராம். அப்போது, கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன் (28), திருவனந்தபுரம் அருகே பாப்பனம்கோடு பகுதியைச் சேர்ந்த ஷிபு (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், காயமடைந்த சண்ணி, ரதீஷ், ஷிபு ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT