கன்னியாகுமரி

ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநர் சாவு

DIN

பள்ளியாடி அருகே ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், பள்ளியாடி அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக,  நாகர்கோவில் ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸ் தரப்பில் கூறுகையில், சடலமாக கிடந்தவர் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ( 29); தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT