கன்னியாகுமரி

மார்த்தாண்டத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

DIN

குளங்கள், கால்வாய்கள், நீர் நிலைகளை முழுமையாக தூர் வார வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் மார்த்தாண்டத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் த. மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குழித்துறை நகரச் செயலர் பொன். ஆசைத்தம்பி,  மாவட்ட அவைத் தலைவர்  பப்புஷன், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்பலீலா ஆல்பன், மாவட்ட மகளிரணி நிர்வாகி கிளாடிஸ் லில்லி, மாவட்ட  இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பீனா அமிர்தராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஜோஸ், குழித்துறை நகர இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, மேல்புறம் ஒன்றியச் செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், அவைத் தலைவர் எஸ். மாஹின் அபூபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT