தேர்தல் விதிமுறை மீறல் என்ற பெயரில் கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சில விதிமுறைகள் வகுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பாக நாகர்கோவில் நகரில் வீதி ஓரங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றியுள்ளனர். இரும்பாலான கொடி மரங்களும் அறுத்து எடுக்கப்பட்டுள்ளன. கொடிக் கம்பங்களை வெட்டியது எந்த விதத்தில் நியாயம்?
வெட்டப்பட்ட கொடிக்கம்பங்களை தேர்தல் முடிந்த பிறகு அதே இடத்தில் வைத்து தருவார்களா? எனவே தேர்தல் ஆணையம் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.