கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே  தம்பதி மீது தாக்குதல்

DIN

நித்திரவிளை அருகே முன் விரோதம் காரணமாக தம்பதியரை தாக்கிய சம்பவத்தில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்திரவிளை அருகே ஆலங்கோடு தும்மங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ்  (54). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன் மோகன்தாஸ் அவரது மனைவி ரோஸ்லெட் ஆகியோர் அவ்வழியாக நடந்து சென்றனராம். அப்போது, முருகன், அவரது மனைவி சுனிதா உள்ளிட்டோர் மோகன்தாஸ் தம்பதியரை வழி மறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மோகன்தாஸ் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸார் முருகன் அவரது மனைவி சுனிதா ஆகியோர் மீதும், மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் மோகன்தாஸ், கென்னடி, ஸ்ரீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT