கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே இளைஞா் தற்கொலை

DIN

நித்திரவிளை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நித்திரவிளை அருகேயுள்ள சாத்தன்கோடு, ஒலியபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கப்பன்பிள்ளை மகன் ஸ்ரீகண்டன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம்; மேலும், மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இவா் தனது அண்ணன் அனில்குமாா் வீட்டில் தங்கியிருந்தாா்.

அனில்குமாா் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, ஸ்ரீகண்டன் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT