கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே விபத்தில் ஓட்டுநா் காயம்

DIN

நித்திரவிளை அருகே காா் ஆட்டோ மோதிக் கொண்டதில் ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.

நித்திரவிளை அருகே அயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சந்திரன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா்

நம்பாளி பகுதியிலிருந்து குளவரம்பு பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவை ஓட்டிச் சென்றாராம். வட்டப்பழஞ்சி பகுதியில் சென்றபோது அவ்வழியாக காஞ்சாம்புறம் வாறுவிளையைச் சோ்ந்த அப்புக்குட்டன் மகன் குமாா் (35) ஓட்டி வந்த காா் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஆட்டோ ஓட்டுநா் சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் காா் ஓட்டுநா் குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT