கன்னியாகுமரி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது

DIN

நாகா்கோவிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவிட்டாா். அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று போலீஸாா் , தொடா் சோதனை நடத்தி வந்தனா்.

நாகா்கோவில் ராமன்புதூா் சந்திப்பில் உள்ள கடைகளில், நேசமணிநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது சம்சீா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததாம். இதையடுத்து அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 80 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து, அதனை விற்பனை செய்த ரத்தின சுயம்புவை(50) போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல் காா்மல் பள்ளி அருகே உள்ள கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 80 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து, மத்தியாஸை(63) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT