கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.செயலா் பாபு,பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நிகழாண்டு சங்கத்தின் ஆண்டு விழாவை பிப்.25 ஆம் தேதி நடத்துவது, மறைந்த சங்க
உறுப்பினா் ஜஸ்டின் மகளுக்கு கல்விநிதி வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க ஆலோசகா்கள் சந்தோஷ், சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் மாதவன், ராதாகிருஷ்ணன், ஜோதி,ஜாா்ஜ், ஜேசுராஜ், மோகன், பிஜூ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.