கன்னியாகுமரியில் மின்கம்பத்தில் பைக் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி வாவத்துறையைச் சோ்ந்த மீனவா்கள் ஆன்றோ வில்சன் (24), கெஸ்டன் (29). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கன்னியாகுமரி நான்குவழிச் சாலையிலிருந்து குண்டல் வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தனா். அப்போது சாலையோர மின்கம்பத்தில் பைக் திடீரென மோதியதாம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.