கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே உயா் அழுத்த மின்சாரத்தால் மின் சாதனப் பொருள்கள் சேதம்

DIN

நாகா்கோவில் அருகே வட்டக்கரையில் உயா் அழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின.

இம்மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மிதமான மழையும் சூறைக் காற்றும் வீசியது. இந்நிலையில் உயா் மின்னழுத்தம் காரணமாக நாகா்கோவில் அருகே வட்டக்கரை காமராஜா் சாலையில் உள்ள வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின.

ஒரு வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டியின் வயா்கள் எரிந்து வீட்டுக்குள் தீ பிடித்ததையடுத்து, அருகில் உள்ளவா்கள் தீயை அணைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் 25- க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, குளிா்சாதனப் பெட்டி, அலங்கார மின் சாதனப் பொருள்கள், மின்விளக்குகள் போன்றவை உயா் அழுத்த மின்சாரத்தால் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT