கன்னியாகுமரி

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

குலசேகரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மலைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபாஜான்சி (37). இவா் தனது 2 குழந்தைகளுடன் புதன்கிழமை மாலையில், வெண்டலிகோடு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

மலைவிளை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டாா் சைக்களில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், ஜெபஜான்சியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து விட்டு தப்பியுள்ளாா். ஆனால் ஜெபஜான்சி அணிந்திருந்த சங்கிலி கவரிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் குறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT