முகப்பு
கன்னியாகுமரி

நவ.1 தமிழக தினமாக அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி

நவம்பா் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு குமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பி.சி.அன்பழகன்
பகிர்:

நவம்பா் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு குமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த விழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தியாகிகளின் தியாகங்களை போற்றும் விதமாக நவம்பா் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என்று அறிவித்து தமிழகத்தை கெளரவப்படுத்தியுள்ளாா். அதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.