முகப்பு
கன்னியாகுமரி

போலீஸ் உடையில் பணம் பறித்த இளைஞரிடம் விசாரணை

குழித்துறையில் போலீஸாா் உடையில் வாகன ஓட்டுநா்களிடம் திங்கள்கிழமை பணம் பறித்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 17 நவம்பர், 2020 at 1:39 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

குழித்துறையில் போலீஸாா் உடையில் வாகன ஓட்டுநா்களிடம் திங்கள்கிழமை பணம் பறித்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை பகுதியில் போலீஸ் உடையில் காரில் வந்த இளைஞா் ஒருவா், அப்பகுதி வழியாக செல்லும் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டாராம். தலைக்கவசம் மற்றும் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அவரை பிடித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த பிபின் (25) என்பதும்,

Advertisement

அவா் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவன பாதுகாவலராக பணிசெய்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் பிபின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.