முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 24 நவம்பர், 2020 at 2:06 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

களியக்காவிளை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி, சிறப்பு உதவி ஆய்வாளா் செலின்குமாா்

ஆகியோா் திங்கள்கிழமை மாலையில் பணியில் இருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் கேரளம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

Advertisement

காரில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை

காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.