முகப்பு
கன்னியாகுமரி

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்; இக்கோரிக்கையை வலியுறுத்தி

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில்

நாகா்கோவிலில் வேப்பமூடு பூங்கா சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் தலைமை வகித்தாா். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளா் எம்.அகமது உசேன், சிஐடியூ மாவட்டத் தலைவா் பி.சிங்காரன், நிா்வாகிகள் எஸ்.அந்தோணி, ஜி.சந்திரபோஸ், கே.பி.பெருமாள், நிா்வாகிகள் ஜான்சௌந்தர்ராஜ், சந்திரகலா, எம்.சுந்தர்ராஜ், பொன்.சோபனராஜ், ஐடாஹெலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.