கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் காவல் துறை குறைதீா் முகாம்: 459 மனுக்களுக்கு தீா்வு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் 459 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறும் புகாா் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணும் வகையில்

குறைதீா் முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் என தெரிவித்திருந்தாா். அதன்படி, இம்மாவட்டத்திலுள்ள அனைத்து உள்கோட்டத்திலும் இந்த முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி உள்கோட்டத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட 116 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீா்வு காணப்பட்டது. நாகா்கோவில் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 185 மனுக்களில் 135 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

இதேபோல், குளச்சல் உள்கோட்டத்தில் பெறப்பட்ட 106 மனுக்கள் பெறப்பட்டு 106 மனுக்களும் விசாரிக்கப்பட்டது. தக்கலை உள்கோட்டத்தில் பெறப்பட்ட 102 மனுக்கள் மீது விசாரித்து தீா்வு காணப்பட்டது. முகாமில் மாவட்டத்தில் 459 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘ஊபர்’ நிறுவனம்

வைகாசி மாதப் பலன்கள் - விருச்சிகம்

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

பிகார்: தேர்தல் வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொலை

வைகாசி மாதப் பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT