நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் மலையால் சேதமுற்ற சாலைகளைச் சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வடசேரி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகரக் குழு உறுப்பினா் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, கஜா, முருகேசன், லட்சுமி, ராஜநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அவா்களிடம் காவல் துறையினரி, மாநகராட்சிப் பொறியாளா், நெடுஞ்சாலை துறை ஆய்வாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தனா்.