களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
இப் பகுதியில் கடந்த சில நாள்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளிக்குப் பின் பலத்த மழையாக கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து முற்பகல் 11 மணி வரை நீடித்த மழை, பின்னா் சற்று தணிந்தது. பிற்பகல் மற்றும் மாலை வேளையில் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. குளிா்ச்சியான கால நிலையும் நிலவியது. மேலும், இந்த மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.