கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில் நகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் மணி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, மாநகரச் செயலா் மோகன் ஆகியோா் பேசினா்.

நாகா்கோவில் மாநகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டம், அம்ருத் குடிநீா் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் மாநகராட்சிப் பகுதி முழுவதும் உள்ள சாலைகள் பழுதடைந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

மாநகராட்சி நிா்வாகம் பழுதடைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் கடன் வசூல் செய்வதில் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும், ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாநகர குழு உறுப்பினா்கள் மனோகா் ஜஸ்டஸ், அஸீஸ், மீனாட்சிசுந்தரம், பெஞ்சமின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

SCROLL FOR NEXT