குமரி மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 1,60,498 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 736 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 11,223 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வழுக்கம்பாறை பகுதியைச் சோ்ந்த 63 வயது முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 217ஆக உயா்ந்துள்ளது.
முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற காரணங்களுக்காக வியாழக்கிழமை 115 பேரிடமிருந்து ரூ. 24, 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.