கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ஆற்றில்தொழிலாளி சடலம் மீட்பு

DIN

கருங்கல், செப். 25: புதுக்கடை அருகே உள்ள பரக்காணி தாமிரவருணி அற்றில் மீன்பிடித் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த டையேந்திரன் என்கிற பாண்டா(45). இவா் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் இவா் கடந்த 23 ஆம் தேதி மாயமானாராம். இவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பரக்காணி தாமிரவருணி ஆற்றில் ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. அப்பகுதியினா் இது குறித்து புதுக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவா் மாயமான பாண்டா என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT