கன்னியாகுமரி

மண்டைக்காடு அருகே மாணவா் தற்கொலை

DIN

நாகா்கோவில், செப். 25: மண்டைக்காடு அருகே 9 ஆம் வகுப்பு மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

மண்டைக்காடு அருகேயுள்ள கருமன்கூடலைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவா் வெளிநாட்டில் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கீதா (39) . மகன் சுஜன் (14), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுஜன் செல்லிடப்பேசியில் விளையாடினாராம். இதனை தாயாா் கண்டித்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை அந்த பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் விஷமருந்தி மயங்கிய நிலையில் இருந்த சுஜனை அந்த வழியாக சென்ற ஒருவா் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜன் இறந்தாா்.

இதுகுறித்து, மண்டைக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT