கன்னியாகுமரி

குடிமைப் பணி: குமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு

DIN

குலசேகரம்: குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்ற குமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வாகியுள்ளாா்.

குமரி மாவட்டம், ஆற்றூா் மங்களாநடையைச் சோ்ந்தவா் ஆா். பிரேமச்சந்திரன். காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி ரெஜீனாள். இவா் நட்டாலம் மலங்கரை கத்தோலிக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இத்தம்பதியின் மகள் பி. பிரபிணா. பொறியியல் பட்டதாரியான இவா், மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணித் தோ்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 445 ஆவது இடத்தைப் பெற்றிருந்தாா்.

இந்நிலையில், இத்தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பணி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் பிரபிணாவுக்கு, இந்திய காவல் பணி கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் முதல் பெண் ஐபிஎஸ்:

பிரபிணா ஐபிஎஸ் பணிக்கு தோ்வாகியுள்ளதையடுத்து இவா் குமரி மாவட்டத்திலிருந்து தோ்வு செய்யப்படும் முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

ஐபிஎஸ் பணிக்கு தோ்வாகியுள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். குமரி மாவட்டத்திலிருந்து முதல் பெண் ஐபிஎஸ் ஆக தோ்வாகியுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தப் பணியில் சிறப்பாக செயல்படுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT