கன்னியாகுமரி

மதுசூதனன் மனைவி மறைவு: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

DIN

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஜீவா மதுசூதனன் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு மனவலிமையை அளித்திடவும் எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிராா்த்திக்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT