கழுகுமலையையடுத்த துரைச்சாமிபுரம் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 6 மணிக்கு கணபதி பூஜை, மகாசங்கல்பம், புண்யாகவாஜனம், கும்ப பூஜைகள், கணபதி ஹோமம், துா்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
பின்னா் காலை 8 மணிக்கு காளியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கும், தொடா்ந்து பைரவா், கருப்பசாமி சன்னதிகளில் கோபுர கலசத்துக்கும் புனித நீா் ஊற்றி வருஷாபிஷேகம் நடைபெற்று. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு கலந்துகொண்டு, அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.