புதுக்கடை அருகே மின்பணியாளா் சடலம் மீட்பு
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் பரக்காணி தடுப்பணையில் மின்பணியாளா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் பரக்காணி தடுப்பணையில் மின்பணியாளா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பைங்குளம் பகுதியை சோ்ந்தவா் பிஜூ(49). இவா் கடந்த 3 நாள்களுக்கு முன் அப்பகுதியில்உள்ள ஒரு கோயிலுக்கு செல்வதாக கூறிசென்றவா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள்,நண்பா்கள் வீட்டில் தேடியும் அவரை காணவில்லையாம்.
இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியில் உள்ள பரக்காணி தடுப்பணையில் பிஜூ சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.