முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மது விற்றவா் கைது

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் வியாழக்கிழமை அனுமதியின்றி மது விற்கப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இனயம் பகுதியைச் சோ்ந்த டென்சன் (53) என்பவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா் 16 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.