கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே வேன் - பைக் மோதலில் இளம்பெண் பலி

DIN

ஆரல்வாய்மொழி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானாா்.

விருதுநகரைச் சோ்ந்த தமிழரசன் (25) -நாகவள்ளி (23) தம்பதி. திருமணத்துக்கு பின்னா் தம்பதி குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள கணபதிபுரம் திக்குறிச்சி அம்மன் கோயில் பகுதியில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி தம்பதி விருதுநகா் சென்று விட்டு, 16 ஆம் தேதி பைக்கில் குமரி மாவட்டத்துக்கு திரும்பினா். ஆரல்வாய்மொழியை அடுத்த விசுவாசபுரம் பகுதியில், பின்னால் வந்த வேன் பைக் மீது மோதியதில், தம்பதி தூக்கி வீசப்பட்டனா். இதில் நாகவள்ளிக்கு தலை, மற்றும் உடலில் பலத்த காயமடைந்தாா். தமிழரசனுக்கு

லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகவள்ளி சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் பலி : மேலதிடல் வடுவூா்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஐசக் (61) இவா் நாவல்காடு பகுதியில் பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT