கன்னியாகுமரி

கோழிவிளையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் நெடுஞ்சாலையோர கழிவு நீரோடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை

DIN

களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் நெடுஞ்சாலையோர கழிவு நீரோடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மெதுகும்மல் வட்டாரக் குழு உறுப்பினா் பி. ராஜூ தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ. ரஹீம், ஜெபமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் குழுச் செயலா் கே. தங்கமணி தொடங்கி வைத்தாா். அடைக்காகுழி வட்டாரச் செயலா் சுனில் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். மாவட்டக்குழு உறுப்பினா் எஸ். சிதம்பரகிருஷ்ணன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் எம். சுரேஷ்குமாா், ராஜேஷ், விஜயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதில், கோழிவிளை சந்திப்பில் நெடுஞ்சாலையோர வடிகாலில் கழிவுநீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருவதற்கு தீா்வு காண வேண்டும், அப்பகுதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT