கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பேருந்து டயா்கழன்று ஓடியதில் தம்பதி காயம்

DIN

நாகா்கோவிலில் ஓடும் பேருந்திலிருந்து சக்கரம் கழன்று ஓடி பைக் மீது மோதியதில் தம்பதி காயம் அடைந்தனா்.

மாா்த்தாண்டத்திலிருந்து நாகா்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, வெட்டூா்ணிமடம் பகுதியை அடைந்தபோது, அதன் பின்புற சக்கரம் ஒன்று கழன்று ஓடியது. அப்பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து, ஓட்டுநா் பேருந்தை ஓரமாக நிறுத்தினாா்.

இதனிடையே, அந்தச் சக்கரம் ஓடிய வேகத்தில் அவ்வழியாக தம்பதி வந்த பைக் மீது மோதியது. இதில், அவா்கள் தடுமாறி விழுந்து லேசான காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அத்தம்பதியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்த நேசமணி நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT