கன்னியாகுமரி

வீட்டில் பெட்ரோல் பதுக்கியவா் கைது

DIN

களியக்காவிளை அருகே வீட்டில் பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பொன்னப்பநகா் பகுதியில் ஒரு வீட்டில் பெட்ரோல், டீசல் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், களியக்காவிளை உதவி காவல் ஆய்வாளா்(பயிற்சி) காா்த்திகேயன் தலைமையில் போலீஸாா் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கி வைத்திருந்த 40 லிட்டா் பெட்ரோல், 5 லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக , ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (55) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT